என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கள்ளத் தொடர்பு பிரச்சினை"
தாடிக்கொம்பு:
திண்டுககல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 61). இவர் நெடுஞ்சாலைத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜோதிலெட்சுமி (34). இவர்களுக்கு சஞ்சீவ் (12) என்ற மகன் உள்ளார்.
தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆறுமுகம் மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் ஜோதிலெட்சுமி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
நேற்று மகன் பள்ளிக்கு சென்ற பிறகு வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். மாலையில் வீடு திரும்பிய மகன் தனது தாயின் நிலையை பார்த்து கதறி அழுதான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ஆறுமுகத்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவியிடம் விவாகரத்து பெற்று விட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிலெட்சுமியை திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். கணவர் இறந்த பிறகு ஜோதிலெட்சுமி வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து வந்தார். அவருக்கு வேறு யாருடனாவது பழக்கம் இருந்ததா? எனவும் தனது மகனை விட்டு விட்டு எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது செல்போன் எண்களை வைத்து வேறு யாருடனும் தொடர்பில் இருந்தாரா? எனவும் போலீசார் விசரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்